2025 ஜூன் 25, புதன்கிழமை

கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகளிடம் கப்பம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாணந்துறை, நல்லுருவ கடற்கரைக்கு வருகை தரும் காதல் ஜோடிகளிடம் கப்பம் பெற்றதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாணந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாழைத்தோட்டம் பொலிஸில் கடமையாற்றும் மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிள், நீதிமன்ற அதிகாரியொருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருபவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேற்படி நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .