2025 ஜூன் 25, புதன்கிழமை

வீதிகளை கடக்கும்போது மஞ்சள் கடவையை பயன்படுத்த வலியுறுத்தல்

Super User   / 2011 செப்டெம்பர் 02 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

வீதியை கடக்கும்போது, பாதசாரிகளுக்கான மஞ்சள் கடவையை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை கொழும்பு நகர போக்குவரத்து பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பாதசாரிகள் கண்ட கண்ட இடங்களில் வீதியை கடக்காது, பாதசாரி கடவைகள், மேம்பாலங்களை பயன்படுத்தி வீதியை கடப்பதை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை பொலிஸார் இன்று செயற்படுத்தினர்.

இத்திட்டங்கள் குறிப்பிடத்தக்க காலத்துக்கு செயற்படுத்தப்படும். அதன்பின்னர் கண்ட இடங்களில் வீதியை கடப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கூறினார்.

பாதசாரி கடவைகளை பயன்படுத்துவதன் மூலம் வீதி விபத்துகளையும் வாகன நெரிசல்களையும் தவரிக்க உதவுமாறு பொதுமக்களை பொலிஸார் கோரியுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0

  • Hot water Saturday, 03 September 2011 02:03 AM

    இதை அவசியம் செய்யவேண்டும்.

    Reply : 0       0

    ruban Saturday, 03 September 2011 03:56 AM

    முதல்ல லஞ்சம் பெறுவதை எப்படி தடுக்கலாம் என்று சொல்லுங்க ?

    Reply : 0       0

    jampettah Saturday, 03 September 2011 05:23 AM

    இது நல்ல திட்டம்.......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .