2025 ஜூன் 25, புதன்கிழமை

பிரேமதாஸ பாணியில் கொழும்பில் பாரிய வீடமைப்புத் திட்டம்: முஸம்மில்

Super User   / 2011 செப்டெம்பர் 23 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

கொழும்பில் 50  சதவீதமான வீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலையில் இல்லை எனவும் குறைந்த வருமானம் பெறுவோருக்காக பாரிய வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபைக்கான ஐ.தே.க. வேட்பாளர் ஏ.ஜே.எம். முஸம்மில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

1980களில் முன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸ மேற்கொண்ட வீடமைப்புத் திட்டங்களைப் போன்றதாக இது இருக்கும் எனவும் முஸம்மில் கூறினார்.

அதேவேளை கொழும்பிலிருந்து எவரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.

'உத்தேசிக்கப்பட்டுள்ள வெளியேற்றும் திட்டம்  காரணமாக தமது வீடுகளையும் காணிகளையும் இழக்க நேரிடுமோ என நகரில் வசிக்கும் ஏழை மக்கள் அச்சத்துடன் உள்ளனர். எந்த நிலையிலும் அதை நாம் அனுமதிக்க மாட்டோம்' என அவர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0

  • mdmk Saturday, 24 September 2011 06:58 AM

    அப்படியானால் கொழும்பின் எல்லைலையை விசாலமாக்க போறிங்களா?

    Reply : 0       0

    xlntgson Saturday, 24 September 2011 09:08 PM

    பிரேமதாசா கொழும்பில் உள்ளவர்களுக்கு கொழும்பிலே வீடு கொடுத்தார் என்பது பொருள்! கொழும்பின் எல்லைகள் விசாலப்படுத்தப்பட்ட பின் கொழும்பில் எங்காவது எங்களுக்கு வீடு கொடுங்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக்கொண்டால் யாருக்கு என்ன பிரச்சினை?

    Reply : 0       0

    muslim Saturday, 24 September 2011 10:26 PM

    கொடுப்பார் , ஏற்கனவே ஆளும் கட்சி கூட்டணி (ஸ்ரீ.ல.சு.க) ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து என்ன சாதிக்க நினைக்கிறது.
    பிரேமதாசா ஜனாதிபதி , பிரதமர் பதவியில் இருந்தபோது வீடு கட்டினார். மகிந்த இவருக்கு வீடு கட்டி கொடுப்பார் போலும். கொழும்பு வாழ் மக்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .