2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தியவன்ன ஓயவிலிருந்து சடலம் மீட்பு

Super User   / 2012 பெப்ரவரி 21 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

நாடாளுமன்றத்திற்கு அருகில் தியவன்னா ஓயவிலிருந்து இன்று காலை ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சடலம் குறித்து பிரதேசவாசிகள் பலர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.  வெலிக்கடை பொலிஸார் இச்சடலத்தை மீட்டனர். 

இச்சடலத்தின் நீரில் உப்பிய நிலையில் காணப்படுவதால் சடலத்துக்குரியவரின் வயது அடையாளங்களை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இச்சடலம் 3 நாட்கள் பழையதாகும்.  சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு வந்த கடுவெல பதில் நீதவான், சடலத்தை பார்வையிட்டார். அதன்பின் பிரேத பரிசோதனைக்கு சடலம்அனுப்பப்பட்டது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .