2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததன் காரணமாக இளைஞர் பலி

Suganthini Ratnam   / 2012 மார்ச் 29 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனஷா)


நீர்கொழும்பு, கல்கந்த சந்தியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தின்போது, மோட்டார் சைக்கிளொன்று தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக  இளைஞர் ஒருவர் தீயில் கருகி மரணமடைந்துள்ளார்.

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்றுடன்    மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் இதன்போது  மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததன் காரணமாக   மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் தீயில் மரணமடைந்ததாகவும் நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் முற்றாக தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .