2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அரசியல் தொடர்புகளால் விடுவிக்கப்பட்டேன்; கடத்தப்பட்ட வர்த்தகரின் திகில் அனுபவம்

Super User   / 2012 ஏப்ரல் 01 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                    (கிறிஸ் கமலேந்திரன்)

தனது அரசியல் தொடர்புகள் காரணமாக கடத்தல்காரர்களிடமிருந்துதான் தப்பி வந்ததாக அண்மையில் கடத்திச் செல்லப்பட்டு, பல மணித்தியாலங்களின் பின் வீதியோரத்தில் விடப்பட்ட வர்த்தகரான சாகர சேனாரட்ன கூறியுள்ளர். ராஜகிரியவில் வசிக்கும், வாகன உதிரிப்பாக வர்த்தகம் மற்றும் நிர்மாணத்துறை சார்ந்த இவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என்பதுடன் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தான் அதிர்ச்சியிலிருந்து இன்னும்முழுமையாள மீளவில்லை எனக் கூறும் சகார சேனாரட்ன, தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருப்பதா அல்லது தான் 10 வருடகாலம் வசித்த அவுஸ்திரேலியாவுக்கு திரும்பிச் செல்வதா என  சிந்தித்துவருவதாக தமிழ் மிரரின் சகோதர ஆங்கில வார இதழான சண்டே டைம்ஸுக்கு கூறினார்.

மேற்படி கடத்தல் சம்பவம் குறித்து அவர் கூறுகையில்,

"கடந்த திங்கட்கிழமை மாலை, நுகேகொடையிலுள்ள எனது கடையிலிருந்து புறப்பட்டு வர்த்தக அலுவல் காரணமாக ஹங்வெல்லை நோக்கி எனது சாரதியுடன் சென்றுகொண்டிருந்தேன். மிரிஹான ஜுபிளி தூணுக்கு அருகில் வைத்து எமக்குப் பின்னால் வந்த வான் ஒன்று கடுமையாக ஹோர்னை அடிக்க ஆரம்பித்தது. நான் என்ன பிரச்சினை என்று கேட்பதற்காக எனது வாகனத்திலிருந்து இறங்கினேன். அப்போது நான் வானிற்குள் இழுக்கப்பட்டு, வானில் தரையில் குப்புறக் கிடத்தப்பட்டேன்.

அவர்கள் என்னிடம் 50 மில்லியன் ரூபா கேட்டார்கள். வர்த்தகரான போதிலும் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறினேன். வங்கிக் கடன்பெற்றுள்ளதால் அவ்வளவு பணத்தை வழங்க முடியாதுள்ளதாகவும் சிறிதளவு பணம் தரமுடியும் எனவும் கூறினேன்" என்றார்.

இவ்வான் பேஸ்லைன் வீதி வழியாகச் சென்று மேம்பாலத்தை கடந்து நீர்கொழும்பு பக்கம் திரும்புவதை கொள்கலன் வாகனச் சத்தங்கள் மூலம் உணர்ந்துகொண்டதாக சேனாரட்ன கூறுகிறார்.

"அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என எண்ணினேன். எனது இரத்த அழுத்தம் அதிகரித்தது. கடந்த பல வருடங்களாக நான் மருந்துகளை பயன்படுத்தி வருகிறேன். எனக்கு எதுவும் நடந்தால் எனது மனைவி, இரு மகள்கள், மகன் மற்றும் ஊழியர்களின் கதி என்னவாகும் என நான் யோசித்தேன்"  என அவர் கூறினார்.

வாகனம் சென்றுகொண்டிருக்கும்போது, வானின் சாரதிக்கு தொலைபேசி அழைப்பொன்று வர, தொலைபேசியை மற்றொருவரிடம் சாரதி கொடுத்தார்.  இரண்டு அல்லது மூன்று அழைப்புகள் வந்தன.'அவர்கள் பீதியடைந்தார்கள் என நான் உணர்ந்தேன். எனக்கு எதுவும் நடக்காது என அவர்கள் கூறுவதை கேட்டேன். அப்போதுதான் நான் தப்ப முடியும் என உணர்ந்தேன்.

எனது வாகனத்தின் சாரதி எனது குடும்பத்திற்கும் மைத்துனருக்கும் அறிவித்துள்ளார் எனவும் சிலர் என்னை விடுவிப்பதற்கு முயற்சிக்கிறார்கள் எனவும் நம்பினேன்.

இரவு 9 மணியளவில் மாபோலைக்கு அருகிலுள்ள உணவு விடுதியொன்றுக்கு அருகில் வான் நிறுத்தப்பட்டது.  நான் வானிலிருந்து இறக்கப்பட்டு, அருகிலுள்ள தரிசு நிலமொன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டேன். 15 நிமிடங்களுக்கு நான் அங்கிருந்து நகரக்கூடாது  என அவர்கள் என்னிடம் கூறினர். தண்ணீர் போத்தலொன்றையும் தந்தனர். வங்கி கணக்கிலக்கம் ஒன்றை தந்தால் கொஞ்சம் பணத்தை வைப்பிலிட முடியும் என நான் கூறினேன். ஆனால், அவர்கள் பதிலளிக்காமல் சென்றனர்" என சேனாரட்ன தெரிவித்தார்.

அவர் பின்னர் கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் ஒன்றில் ஏறினார். ஆனால், வீட்டாருடன் தொடர்புகொள்ளக்கூடிய தொலைத்தொடர்பு நிலையம் எதுவும் தென்படாததால் பின்னர் எதிர்த்திசையில் வந்த பஸ் ஒன்றில் ஏறினார். ஜா-எல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தொலைத்தொடர்பு நிலையமொன்றை அவர் கண்டார்.

"நான் வீட்டாருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் நிற்கும் இடத்தை கூறினேன். ஜா-எல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸ் அங்கு வந்து என்னை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.  எனது மைத்துனரும் மிரிஹான பொலிஸாருடன் குழுவொன்றை அனுப்பியிருந்தார்" என அவர் கூறினார்.

தன்னை விடுவிக்கச் செய்வதற்காக தனது மைத்துனரான அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, பொலிஸ் மா அதிபர் மற்றும் செல்வாக்குள்ள பிரமுகர்களடன் தொடர்புகொண்டதாகவும் சேனாரட்ன தெரிவித்தார்.

"எனது அரசியல் தொடர்புகள் காரணமாக நான் விடுவிக்கப்பட்டேன். ஆனால் அவர்கள் மீண்டும் என்னைத் தேடி வருவார்களா என்று தெரியவில்லை. அதனால்தான்  நன் நாட்ட விட்டு வெளியேறுவது குறித்து சிந்திக்கின்றேன்" எனவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக 5 பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்துகின்றன. எனினும் இதுவரை திருப்புமுனைகள் எதுவும் ஏற்படவில்லை. (சண்டே டைம்ஸ்)


You May Also Like

  Comments - 0

  • neethan Sunday, 01 April 2012 11:24 PM

    அரசியல் செல்வாக்குடைய பெரும்பான்மை இனத்தவர் என்பதால் இந்த நிலைமை..... சிறுபான்மை இனத்தவர் என்றால் நிலைமை எவ்வாறு இருக்கும்?

    Reply : 0       0

    aj Monday, 02 April 2012 12:17 AM

    அரசியல் செல்வாக்கு என்டால்.... கடத்தியவர்கே விடுவிக்கும் காட்சிகள் .

    Reply : 0       0

    as Monday, 02 April 2012 04:44 AM

    அதாவது, கடத்தியவர்கள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள்?

    Reply : 0       0

    uvais.m.s Monday, 02 April 2012 05:24 AM

    ஆக, அரசியல் தொடர்பு இல்லாத மற்ற மக்கள் நிலை ?????

    Reply : 0       0

    USAIDH Monday, 02 April 2012 02:16 PM

    அரசியல் தொடர்பு உள்ளவர்கள் மாத்திரம் மனிதர்கள். மற்றவர்கள்? மனித உரிமை மீறல்கள் விசாரணை கட்டாயம் அவசியம்.

    Reply : 0       0

    ruwais Monday, 02 April 2012 04:53 PM

    இப்போ புரிஞ்சி போச்சி. எல்லாம் பண்றாங்க? என்ன சட்டம் அப்பா இந்த நாட்டுல!

    Reply : 0       0

    siriththiran Monday, 02 April 2012 10:55 PM

    நமக்கு மனித உரிமைகள் பற்றி வெளிநாடுகள் பாடம் நடத்த வேண்டிய அவசியம் கிடையாது..... ஹி ....ஹி...ஹி...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .