2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சுங்க இலாக்காவினால் ஏற்படுத்தப்பட்ட கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன: பிரபா கணேசன் எம்.பி.

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 07 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில வாரங்களாக கட்டுநாயக்க விமானநிலையத்தில் இலங்கைக்கு வரும் பிரயாணிகளின் - குறிப்;பாக தமிழ் நாட்டிலிருந்து வருபவர்களிடம் இலங்கை சுங்க இலாக்காவின் ஆர்.டீ.எப். துறையினரால் ஏற்படுத்தப்பட்ட கெடுபிடிகள் தனது வேண்டுகோளுக்கிணங்க நிறுத்தப்பட்டதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அவ்வறிக்கையில் மேலும் அவர் தெரிவித்ததாவது...

அண்மைக் காலமாக இந்திய தமிழ்நாட்டிலிருந்து வரும் பிரயாணிகளிடமும் அதேபோல் இலங்கையிலிருந்து தமிழ் நாட்டிற்கு சென்று சிறு வர்த்தகம் புரியும் இலங்கை பிரயாணிகளிடமும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் சுங்க இலாக்காவினர் பாரபட்சமாக நடந்து வந்தனர். இச்சிறு வர்த்தகர்கள் கொண்டு வரும் பொருட்களை சுங்கத்தீர்வைக்கு உள்வாங்காமல் பொருட்களை பறிமுதல் செய்யுமளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. அதேபோல் இலங்கையைச் சார்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் - தமிழ்நாடு சென்று தனது சொந்த பாவனைக்கு எடுத்துவரும் பொருட்களை கூட சுங்க இலாக்காவைச் சேர்ந்த ஆர்.டீ.எப். துறையினர் வெளியில் கொண்டுவருவதற்கு அனுமதிப்பதில்லை.

இது சம்பந்தமாக இலங்கை கடவுச் சீட்டில் பயணம் செய்யும் எமது தமிழ் மக்கள் என்னிடம் முறைபாடு செய்திருந்தனர்.

சிறு வர்த்தகம் செய்யும் தமிழர்கள் மீது மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட செயல்பாடுகளினால் எமது அரசாங்கத்திற்கே அவப்பெயர் ஏற்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளிடம் முறையிட்டதுடன் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரிடமும் இது சம்பந்தமாக ஆட்சேபனை செய்யப்பட்டதை தொடர்ந்து சனிக்கிழமை நல்லிரவு முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க இலாக்காவின் ஆர்.டீ.எப். துறையினரின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில அதிகாரிகளினால் நடாத்தப்படும் இவ்வாறான செயல்பாடுகள் எந்த அரசாங்க துறையாக இருந்தாலும் எனது கவனத்திற்கு கொண்டுவரப்படுமேயானால் உடனடி நடவடிக்கை எடுக்க முடியும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .