2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சிறிசேன குரேயின் வீட்டில் மாணிக்கக்கல் திருட்டு

Super User   / 2012 மே 10 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                (ரி. பாருக் தாஜுதீன்)

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தருமான சிறிசேன குரேயின் வீட்டிலிருந்து பெறுமதியான மாணிக்கக்கல் ஒன்றும் வெளிநாட்டு நாணயங்களும் வீட்டுப் பணியாளர் ஒருவரினால் திருடப்பட்டள்ளதாக  கொழும்பு நீதவான் நீதிமன்றில் முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

குரேயின் வீட்டிலுள்ள பாதுகாப்புப் பெட்டகத்தை திறந்து, குரேயின் மகன் பிரசன்னவுக்கு சொந்தமான மஞ்சள் நிறத்திலான மாணிக்கக் கல் ஒன்றையும் வெளிநாட்டு நாணயங்களையும் திருடிய குற்றச்சாட்டின் பேரில் இராணுவத்திலிருந்த தப்பிச்சென்றவரான ஆமி வசந்த என அழைக்கப்படும் அமில நுவான் என்பவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இச்சந்தேக நபர் முன்னர் இராணுவத்தின் சிங்கப் படைப்பிரிவில்  பணியாற்றியதாகவும் பின்னர் சிறிசேன குரேயின் வீட்டில் பணியாற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர் 20 தோட்டாக்களை கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  இச்சந்தேக நபரை மே 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .