2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கொழும்பில் ஹோட்டல் மாடியிலிருந்து விழுந்து அமெரிக்க பிரஜை மரணம்

Menaka Mookandi   / 2012 மே 17 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்து  அமெரிக்கப் பிரஜை ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இவர் மேற்படி ஹோட்டலின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

46 வயதான ஜோன் எட்வின் கோல்ஸ்டன் ரயன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று புதன்கிழமை காலை 9.45 மணியளவில் ஹோட்டல் மாடியிலிருந்து விழுந்துள்ள மேற்படி அமெரிக்கப் பிரஜை, காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .