2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நீதி அமைச்சர் - மலேசிய இந்திய சமூக சேவைகள் அமைப்பின் தவிசாளர் சந்திப்பு

Super User   / 2012 மே 18 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கும் மலேசிய - இந்திய சமூக சேவைகள் அமைப்பின் தவிசாளர் பொறியியலாளரான டத்தோ தஸ்லீம் இப்றாஹீமிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை கொழுமபில் இடம்பெற்றது.

இதன்போது,  விசேட விருந்தினராக இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் அஸ்மி செய்னுடீனும் கலந்துகொண்டார். மலேசிய - இந்திய சமூக சேவைகள் அமைப்பின் தவிசாளரினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் சமூகப் பணிகள் இக்கலந்துரையாடலின் போது விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன் குறிப்பிட்ட பணியை இலங்கையில் விஸ்தரிப்பது தொடர்பாக நீதி அமைச்சர் மற்றும் இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் ஆகியேரிடம் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார். மேலும் இலங்கையின் நீதி துறையானது மலேசிய நீதி துறையுடன் இணைந்து எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக நீதி அமைச்சர் மலேசிய பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

லிகோ சர்வதேச அமைப்பின் நிறைவேற்று குழு உறுப்பினர்களான சட்டத்தரணி சாதிக்குல் அமீன், சட்டத்தரணி எம்.சீ.எம். நவாஸ், நீதி அமைச்சரின் இணைப்பு செயலாளர் சட்டத்தரணி எம்.சல்மான் மற்றும் சிபான் மஹ்றூப் ஆகியோரும்
இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .