2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வெதுப்பகத்தில் தீ

Kogilavani   / 2012 டிசெம்பர் 09 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.எம் பௌஸான்)

மல்வானை நகர் பகுதியில் வெதுப்பகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்;ட தீவிபத்தினால் அக்கடை பெருமளவில் எரிந்து நாசமாகியுள்ளது.

வெதுப்பகத்தின்; மேல்மாடியிலிருந்து தீ பரவ ஆரம்பித்துள்ளதகவும் இது தொடர்பில் வெளியில் உள்ளவர்கள் கூச்சலிடும் வரை தாம் அறியவில்லை என்றும் இத் தீவிபத்து தொடர்பாக வெதுப்பகத்தில் கடமையில் இருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்புப் படையினரினதும் பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகளினதும் முயற்சியால் அதிகாலை 4 மணியளவில் இத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இத் தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை அறியப்படவில்லை என்றும் இச்சம்பவம் தொடர்பிலான விசாரணகளை மேற்கொண்டு வருவதாகவும பியகம பொலிஸார் தெரிவித்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .