2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பிரத்தியேக வகுப்பு ஆசிரியருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை விஞ்ஞான வினாத்தாள் வெளியானமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரத்தியேக வகுப்பு ஆசிரியரும் மற்றுமொருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸார் கடுவளை பதில் நீதவான் கோம்பலகே முன்னிலையில் இன்று சனிக்கிழமை ஆஜர்படுத்திய போதே அவ்விருவரையும் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சையில் விஞ்ஞான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியாகிவிட்டது என்ற முறைப்பாட்டையடுத்து அது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே பொலிஸார் இவ்விருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஆசிரியரால் வழங்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளில் உள்ள கேள்விகளில் 18 கேள்விகளும் படங்களும், விடைகளும் பரீட்சையின் போது வழங்கப்பட்ட வினாத்தாளில் உள்ள கேள்விகளும்,பதில்களும், படங்களும் ஒரேமாதிரியாக இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்ததை அடுத்தே இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை கடந்த  15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு முன்னர் கம்பஹா பிரதேசத்திலேயே இந்த மாதிரி வினாத்தாள் தொடர்பில் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .