2025 ஜூன் 23, திங்கட்கிழமை

முன்னாள் நீர்கொழும்பு பிரதி மேயர் ஜெயத்தின் இறுதி சடங்கு

Super User   / 2013 ஜனவரி 21 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே. என்.முனாஷா


கடந்த வெள்ளிக்கிழமை (18) கொழும்பில் உள்ள தனியார் மருத்துவ மனையொன்றில் காலமான முன்னாள் நீர்கொழும்பு பிரதி மேயர் ஜெயம் விஜயரத்தினத்தின் இறுதிச் சடங்கு இன்று திங்கட்கிழமை மாலை நீர்கொழும்பு பொது மயானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அதற்கு முன்னதாக அவரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய, ஜனநாயக மக்கள் முன்னணியின்  தலைவர் மனோ கனேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் இந்து மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இறுதி மரியாதை நிகழ்வில் மாணவர்கள் ஆசிரியர்களால் அன்னாருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

இறுதிச் சடங்கின்போது எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கரமசிங்க அனுப்பிவைத்திருந்த இரங்கல் உரையை ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதி முகாமையாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான பிரதீப் பீரிஸ் வாசித்தார்.

அமரர் ஜெயம் விஜயரத்தினம் நீர்கொழும்பு மாநகர சபையில் நான்கு தடவைகள் உறுப்பினராகவும் சிறிது காலம் பிரதி மேயராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .