2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு நகர மக்களுக்கும் அரசாங்க உதவிகள்: பிரபா எம்.பி

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 26 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

'அரசாங்கத்திற்கு கொழும்பு நகரத்தில் வாழும் சிறுபான்மை மக்கள் வாக்களிக்கவில்லை. இருப்பினும் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுப்பதில் மனமகிழ்ச்சியடைகிறேன்' என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு ஜிந்துபிட்டியில் பரதர் சங்க ஏற்பாட்டில் சமூக சேவைகள் அமைச்சினூடாக நடாத்தப்பட்ட மக்கள் சேவை வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

'கொழும்பு நகரத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு சமூக சேவைகள் அமைச்சினூடாக இன்று ஆயிரம் இலவச மூக்குக் கண்ணாடிகளும் தெரிவு செய்யப்பட்ட 14 விதவை பெண்களுக்கு தலா 10,000 ரூபாவும் அதேபோல் சுயதொழில் செய்வதற்காக மேலும் தெரிவு செய்யப்பட்ட 10 பேருக்கும் தலா 10,000 ரூபாவும் வழங்கப்பட்டது.

மேலும் ஏழை எளிய மக்களுக்காக பல உதவிகள் இன்று வழங்கப்படுகின்றது. கொழும்பு நகரத்தில் இருக்கும் மக்களுக்கு பொதுவாக இவ்வாறான உதவிகள் கிட்டுவதில்லை. இந்த ஜிந்துப்பிட்டி பகுதியைப் போன்று வட கொழும்பிலும் பொரளை தொகுதியிலும் கொழும்பு கிழக்கு தொகுதியிலுமுள்ள ஏழை எளிய மக்களுக்கும் இவ்வாறான சேவைகள் முன்னெடுக்கப்படும்.

பரதர் சங்கத்தினர் சமூக சேவையாற்றுவதில் ஆர்வம் கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது இவர்களுக்கு மென்மேலும் எனது ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளேன். இவர்கள் இன, மத, பேதமின்றி இப்பகுதியிலுள்ள அனைத்து மக்களையும் உள் வாங்கியிருப்பது பெருமைப்படக்கூடிய ஒன்றாகும். இவர்களுக்கு மென்மேலும் சமூக சேவைகள் அமைச்சினூடாக பல உதவிகளை பெற்றுத்தருவேன்' என்று தெரிவித்தார்.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரபா எம்.பியுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொரளை தொகுதி அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபால சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பரத சங்கத்தின் செயலாளர் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .