2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

போதை மருந்து விற்பனை: போலி வைத்தியருக்கு பிணை

Kanagaraj   / 2013 மார்ச் 02 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே. என்.முனாஷா  

போதைப் பொருளுக்கு மாற்றீடாகப் பயன்படுத்தப்படும்; மாத்திரைகள் விற்பனை செய்தமை உட்பட மேலும் பல குற்றச்சாட்டுககள்  தொடர்பில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போலி வைத்தியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய வீதி அக்கரபனக பிரதேசத்தில் தான் நடத்தி வந்த மருந்தகத்தில் இவ்வாறு போதைப்பொருட்களுக்கு மாற்றீடாக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை விற்பனை செய்யும் போது அவர் கைது செய்யப்பட்டார்.

இவர் நீர்கொழும்பு பிரதான நீதவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று சனிக்கிழமை ஆஜர் படுத்திய போதே அவரை ஓன்றரை இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 60 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.
 
நீர்கொழும்பு அக்கரபனக பிரதேசத்தில் மருந்தகம் ஒன்றை நடத்தி வந்த ரத்னாயக்க முதியான்சலாகே அஜித் விபுல பண்டார என்பவருக்கே இவ்வாறு  பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு எதிராக தாக்கல் செய்யபபட்டுள் 'பி'  அறிக்கையில் மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
தனியார் மருந்து விற்பனை நிலையங்களில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ள மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ததாக கம்பஹா மாவட்ட சுகாதார பணிப்பாளர் காரியாலயத்தின் உணவு மற்றும் ஒளெடதங்கள் பரிசோதனை செய்யும் பிரிவினர் சந்தேக நபருக்கு எதிராக குற்றம் சாட்டி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை நீர்கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் சந்தேக நபருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுககளை சுமத்தியுள்ளனர். சந்தேக நபரை கைது செய்த இடத்தில் கைப்பற்றப்பட்ட தேசிய அடையாள அட்டைகள்  தொடர்பாகவும் மற்றும் எந்தவித வைத்திய தகைமையும் இன்றி மருந்தகம் ஒன்றை நடத்தி வந்தமை  தொடர்பாகவும் இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
 
மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் தலா 50 ஆயிரம் ரூபா வீதம் ஒன்றரை இலட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும்,  தலா 20 இலட்சம் ரூபா வீதம் 60 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டார்.
கம்பஹா மாவட்ட சுகாதார பணிப்பாளர் காரியாலயத்தின் உணவு மற்றும் ஒளெடதங்கள் பரிசோதனை பிரிவினரின் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு  பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான போலி வைத்தியர் கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அன்றைய தினத்திலிருந்து விடுக்கப்பட்ட பிணை கோரிக்கை மறுக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .