2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யுவதி கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெறவேண்டுமென கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 மார்ச் 05 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.என்.முனாஷா


ஆடை தொழிற்சாலை யுவதி ஒருவர்  பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெறவேண்டுமென கோரி இன்று செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நடைபெற்றதுடன் நாளைய தினமும் நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் நடைபெற உள்ள நிலையில் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திரத்திற்கான அரங்கம் என்ற அமைப்பினால் இவ் ஆர்ப்பாட்டம்  ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.  இவ்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவயவருவதாவது,

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் கடமை புரிந்து வந்த 23 வயதுடைய யுவதி கடந்த 2007 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 12 ஆம் திகதி நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக சென்றபோது வைத்தியசாலை கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுத்தப்பட்டு மர்மானமுறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையின் வைத்தியரான இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ (32 வயது) என்பவர் நீர்கொழும்பு பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இக்கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்ட வந்தநிலையில்; நீதியான விசாரணைகள் இடம்பெறவேண்டும் எனக்கோரி பாதிக்கப்பட்ட தரப்பின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .