2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பு பெண் பொலிஸாரின் மகளிர் தின நிகழ்வு

Kogilavani   / 2013 மார்ச் 10 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே. என்.முனாஷா


நீர்கொழும்பு பொலிஸாரின் மகளிர் தின நிகழ்வு நேற்று சனிக்கிழமை நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்கரைப் பூங்காவில் நடைபெற்றது.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையம், ஏத்துக்கால சுற்றுலாத்துறை பொலிஸ் நிலையம் ஆகியன நிமல்லான்ஸா அமைப்பின் இரண்டாம் இலக்க மகளிர் பிரிவு, குடாபாடு 733 பி, கிராம சேவகர் பிரிவின் சிவில் பாதுகாப்புக்; குழு ஆகியவற்றுடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது, எல்லே போட்டி, சங்கீத தொப்பி மாற்றுதல், பலூன் நடனம் உட்பட பல போட்டி; நடைபெற்றன.

சுற்றுலாத்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சார்ஜன் ஜீனா அஸீமின் ஒருங்கிணைப்பில் நடந்த இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அத்துல குமார கமகே, நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி விதாரண உட்பட பலர் கலந்துகொண்டனர்.

போட்டி நிகழ்ச்சிகளில் பொது மக்களுடன் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  வெற்றி பெற்றோருக்கு பரிசில்கள் வழங்கபட்டதுடன், போட்டிகளில் பங்குபற்றிய அனைவருக்கும் நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .