2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

களுத்துறை மாவட்டத்தில் பாதைகள் திறப்பு

Super User   / 2013 மார்ச் 25 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


களுத்துறை, மிரிஸ்வத்தை தோட்டத்தில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இரு பாதைகள் அண்மையில் திறந்துவைக்கப்பட்டன.

மிரிஸ்வத்தை தோட்டம் பன்னில்கந்த பிரிவின் பாதையும் சொரணவத்தை தோட்டத்தின்  ஹொரண எல்லாகந்த பிரிவின் பாதையுமே திறந்துவைக்கப்பட்டன. ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசனினால் இந்த வீதிகள் திறந்துவைக்கப்பட்டது.

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தொழிற்சங்க பொறுப்பாளர் ஆர்.மேகநாதனின் வேண்டுகோளுக்கிணங்க கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  பிரபா கணேசன் கமநெகும விசேட பாதை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த வீதிகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டன.

இதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .