2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வீதியில் செல்லும் பெண்களின் நகைகளை கொள்ளையிட்ட அறுவர் கைது

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 27 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.சாஜஹான்

மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் பயணிக்கும் பெண்களின் நகைகளை கொள்ளையிட்டு  வந்த அறுவரை கொண்ட கொள்ளைக் கோஷ்டியை கைது செய்துள்ளதாகவும் கொள்ளையிடப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை மீட்டுள்ளதாகவும் கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கொள்ளையிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் கத்தி ஒன்றையும் கைக்குண்டு ஒன்றையும் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் தாகொன்ன மற்றும் மாரவில பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர். இது தொடர்பாக கொச்சிக்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .