2026 பெப்ரவரி 18, புதன்கிழமை

இரு மீனவர்களின் சடலங்கள் வைத்தியசாலையில் ஒப்படைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 09 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்       

கடலில் மூழ்கி மரணமான மீனவர்கள் இருவரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தெஹிவளை மீனவர் வீடமைப்புத் தொகுதியை சேர்ந்த அத்வெல்ல முதலிகே திலக் உபதிஸ்ஸ பெரேரா (வயது 53), கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சமன்த அஸ்போன் (வயது 35) ஆகியோரின் சடலங்களே  மீட்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் வீசிய கடும் காற்றினால் இம்மீனவர்கள் கடலில் காணாமல் போயிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .