2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கள்ள நோட்டுக்களை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 08 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

ஆயிரம் ரூபா பெறுமதியான ஆறு கள்ள நோட்டுக்களை வைத்திருந்த ஒருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நம்பிக்கை மோசடி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஆறாயிரம் ரூபா பெறுமதியான ஆயிரம் ரூபா நோட்டுக்கள் ஆறினை நீர்கொழும்பு பொலிஸார் மீட்டுள்ளனர்.

அந்த சந்;தேகநபரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம். என்.பி. அமரசிங்க முன்னிலையில் இன்று(8) ஆஜர் செய்த போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

வனராஜவத்தை, பாலகொட, திக்கோய பிரதேசத்தைச் சேர்ந்த சவரிநாயகம் ஜோன்கெனடி என்ற நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நம்பிக்கை மோசடி சம்பவம் தொடர்பாக கடந்த திங்;கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்தேக நபரை இன்று நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கு முன்னதாக அவரிடமிருந்த பொருட்களை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெற்றுள்ளார்.

இதன் போதே சந்தேக நபரிடமிருந்த போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்றினை அந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீட்டுள்ளார். இதனை அடுத்து தொடர்ந்து சோதனை செய்த போது மேலும் ஐந்து போலி  ஆயிரம் ரூபா நோட்டுக்கள் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து இரண்டு குற்றச்சாட்டுக்கள் பேரிலும் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்தே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .