2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

6 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது

Editorial   / 2023 ஜூன் 10 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கொட பிரதேசத்தில் ஆறு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது .

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று(10) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது இந்த போதைப் பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த போதை பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர்கள் இருவரும் கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஸ்கொட பகுதியில் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட போதை பொருட்களில் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகை இதுவாகும் எனவும் கொஸ்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .