Editorial / 2020 மே 02 , பி.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக 710 கிலோ கிராம் மாட்டிறைச்சியை லொறி ஒன்றில் ஏற்றி வந்த நபர் ஒருவரை, கொச்சிக்கடை பொலிஸார் இன்று (2) கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபர் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பு சந்தியில் பாலம் அருகில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எட்டு மாடுகளை வெட்டி இறைச்சியாக்கி தங்கொட்டுவை பிரதேசத்திலிருந்து லொறி ஒன்றில் ஏற்றி வரும்போது, பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .