Editorial / 2017 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
4 இலட்சம் ரூபாய் பெறுமதியான நவீன ரக அலைபேசிகளை திருடிய நபர் ஒருவரை, நேற்று (07) கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து 24 அலைபேசிகளை மீட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார், தெரிவித்தனர்.
நீர்கொழும்பு, பெரியமுல்லை, சாந்த அந்தோனியார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய சுரங்க சம்பத் குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
செல்லிடத் தொலைபேசிகளை விற்பனை செய்யும் விற்பனை முகவர் ஒருவரிடம் இருந்தே, குறித்த நபர், 24 அலைபேசிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
8 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
43 minute ago
48 minute ago