2026 மார்ச் 18, புதன்கிழமை

கடத்தப்பட்ட முச்சக்கரவண்டி மீட்பு: கடத்திய ஐவர் கைது

Gavitha   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

முச்சக்கரவண்டியைக் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் ஐந்து சந்தேகநபர்களைப் நேற்றுச் சனிக்கிழமை (27) நிட்டம்புவப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

வெள்ளிக்கிழமை (26), ரன்பொகுணுகம பகுதிலுள்ள வீடொன்றின் முன்னால் நின்ற முச்சக்கரவண்டியை கடத்திச் சென்றார்கள் என நிட்டம்புவப் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கிணங்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர்கள், நிட்டம்புவ, களு- எலிய பகுதிகளைச் சேர்ந்த 23, 28, 39, 29, 24 வயதானவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். களவாடப்பட்ட முச்சக்கரவண்டிகள் பொலிஸார் மீட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X