Princiya Dixci / 2017 மார்ச் 12 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தயார் நிலையில் வைத்திருந்த 20,000 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் சந்தேகநபர் இருவர், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
திவுலாப்பிட்டிய களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த கழிவுத் தேயிலையைக் கைப்பற்றியதாகவும், பொதி செய்யப்பட்டிருந்த மேற்படி கழிவுத் தேயிலையில், 100 சதவீதமான சுத்தமான இலங்கைத் தேயிலை என, ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து கொள்கலன்கள் இரண்டும் மீட்கப்பட்டனவெனவும் குறித்த களஞ்சியசாலையிலிருந்த சிலர் தப்பியோடியுள்ளனரெனவும் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago