2025 ஜூலை 09, புதன்கிழமை

சொகுசு வீட்டில் கசிப்பு நிலையம்: இருவர் கைது

Princiya Dixci   / 2016 நவம்பர் 28 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

கட்டானைப் பிரதேசத்தில் இரு மாடிகளைக்கொண்ட சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த கசிப்பு நிலையத்தை, நீர்கொழும்புப் பொலிஸார் சுற்றி வளைத்ததுடன், பெண்ணொருவர் உட்பட சந்தேகநபர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளதோடு, பெருந்தொகையான மதுபானத்தையும் உபகரணங்களையும் ஞாயிற்றுக்கிழமை (27) கைப்பற்றியுள்ளனர்.

கட்டானை, கொந்தகே சந்தி, லுர்து மாவத்தையில் இந்தச் கசிப்புத் தயாரிப்பு நிலையம் இயங்கி வந்துள்ளது.

பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது, கசிப்புத் தயாரிப்பு வேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்துள்ளதுடன், 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கோடா, மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும், சொகுசு வீடுகள் மூன்றினை அதிகத்தொகையான வாடகைக்குப் பெற்று, அதில் ஒரு வீட்டில் மதுபானத் தயாரிப்பு நிலையத்தை நடத்தி வந்துள்ளதாகப் பொஸிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீடுகள், இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்குச் சொந்தமானது என, ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்த நீர்கொழும்பு பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .