2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தியவன்னாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் மரணம்

Editorial   / 2023 ஜனவரி 26 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்துக்கு அண்மையில் கிம்புலாவல பிரதேசத்தில் தியவன்னா ஓயாவுக்குள் படகொன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். ஏனைய மூவரும் கரைக்கு நீந்திவந்து தப்பிவிட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தியவன்னா ஓயாவில் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்கு உள்ளேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.  

இன்று (26) அதிகாலை இடம் பெற்ற இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .