2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

படகு தீக்கிரை

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை, கொரலவெல்ல கடற்பகுதி படகொன்றை, இனந்தெரியாதோர் சிலர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) தீ வைத்து முற்றாக எரித்துள்ளனர்.

மொரட்டுவை தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் இதனால் காலி பிரதான வீதி, ரயில் கடவை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எரித்து சேதமாக்கப்பட்ட படகானது ஐந்து மாதங்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளானது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X