2025 மே 07, புதன்கிழமை

பஸ் மோதி வயோதிப பெண் பலி

Princiya Dixci   / 2016 நவம்பர் 16 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறக்கோட்டைப் பகுதியில் தனியார் பஸ்ஸொன்று மோதியதில், மீகஹவத்தை - முகலான பகுதியைச் சேர்ந்த 65 வயதான வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றுச் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற இவ் விபத்தில்  படுகாயமடைந்த வயோதிப பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே பலியாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துத் தொடர்பில் குறித்த தனியார் பஸ் சாரதியைக் கைதுசெய்துள்ள புறக்கோட்டைப் பொலிஸார், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X