2025 மே 05, திங்கட்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 26 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயிலில் மோதி நபர் ஒருவர் நேற்று  உயிரிழந்துள்ளதாக, கொச்சிக்கடைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தலுவகொட்டுவவிலிருந்து கொழும்புக்கு நோக்கிச் சென்ற  ரயிலில் மோதியே, குறித்த நபர் பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், தலுவகொட்டுவ, கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த  65 வயதையுடைய ஜயசூரிய ஆரச்சிகே பெடின் வெலின்டன் பெரேரா என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கொச்சிக்கடைப் பொலிஸார், மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X