2025 மே 07, புதன்கிழமை

வெள்ளவத்தையில் கைவரிசை; நால்வர் கைது

Princiya Dixci   / 2016 நவம்பர் 13 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றை உடைத்துக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் நால்வர், கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் பணம், டி.வி.டிப் பிளேயர்கள் இரண்டு மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட பல பொருட்கள், சந்தேகநபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

எப்பாவல மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்களை, கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகப் பொலிஸார், மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X