Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 28 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
இலங்கையிலிருந்து டுபாய்க்குச் சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டைகளைக் கடத்தில் செல்ல முற்பட்ட இருவருக்கு, இன்று திங்கட்கிழமை, 3 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக, கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொழும்பு, தெஹிவளையைச் சேர்ந்த பெண்ணொருவரும் குளியாப்பிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவரும், ஒன்றிணைந்து சம்பவதினமான இன்று (28) காலையில் டுபாய்க்குச் செல்வதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த நிலையில், அவர்களின் பொதிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 48 கிலோகிராம் வல்லப்பட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து, பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் ஆணுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, வல்லப்பட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்டதாக, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
49 minute ago
8 hours ago