Princiya Dixci / 2016 மார்ச் 11 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹரகமப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (10) பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோய்ன் வைத்திருந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 1 கிராமும் 100 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பன்னிப்பிட்டியப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபரை, இன்று வெள்ளிக்கிழமை (11) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago