2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

மனித உரிமைகள் குறித்து வடக்கில் 3 நாள் செயலமர்வு

Kogilavani   / 2013 மார்ச் 14 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித உரிமை தொடர்பான விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வுகள் எதிர்வரும் 19,21,22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் நடத்தப்படவுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பதிகாரி ரி.கனகராஜ் தெரிவித்தார்.

இதற்கமைவாக, எதிர்வரும் 19 ஆம் திகதி கிளிநொச்சிப் பகுதியில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஆனந்தராஜா தலைமையில் நடைபெறவுள்ள செயலமர்வில் சமகால மனித உரிமைகள், சிவில் சமூக உப குழுகளின் மனித உரிமை செயற்பாடு, அரச மற்றும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்தல் மனித உரிமை தொடர்பகவும் பொதுமக்களின் உரிமைகள், சிறுவர், பெண்கள் உரிமைகள் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட 107 பாடசாலைகளில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சமாகால மனித உரிமைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்படவுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .