2025 ஜூன் 25, புதன்கிழமை

சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாகுட்டியின் 89 ஆவது ஜனனதினம்

Kogilavani   / 2014 ஜனவரி 06 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 89 ஆவது ஜனனதினம் தெல்லிப்பளை  ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (07) காலை 8.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மஹரகம தேசிய கல்வி நிறுவகப் முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளரும் அகில இலங்கை இந்துமாமன்ற சைவ சமய விவகார குழுத்தலைவருமான கலாநிதி குமாரசாமி சேமசுந்தரம் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில் பல்வேறு துறைகளிலும் சேவையாற்றிய ஐந்து பேருக்கு 'சிவத்தமிழ்' விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன.

உஷன் கந்தசுவாமி கோவில் உதவி தர்மகர்த்தா  வைத்தியகலாநிதி கந்தையா மாணிக்கம், தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய நிர்வாக சபை உறுப்பினர் நாகலிங்கம் தவமணிநாயகம், கலாபூஷணம் சுப்பையா கணபதிப்பிள்ளை, மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான திருமதி அன்னலட்சுமி இராஐதுரை, மட்டுவில் இளைப்பாறிய அதிபரும் சமயம் தமிழ் இலக்கிய எழுத்தாளருமான நாகமுத்து நல்லதம்பி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

தங்கம்மா அப்பாக்குட்டி தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கா தேவஸ்தானத்தின் தலைவியாக இருந்ததுடன், தெல்லிப்பளை துர்க்கபுரம் மகளிர் இல்லத்தினை உருவாக்கி அதன் மூலம் பெற்றோரினை இழந்த சிறுமிகளைப் பராமரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .