2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழில் சிறுகுற்றம் புரிந்த 153பேர் கைது

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 20 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழில் சிறு குற்றங்கள் புரிந்த 153பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி இன்று வெள்ளிக்கிழமை (20) தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இவ்வாறு  தெரிவித்தார். யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச்செயல்களின் பிரகாரம்,

யாழில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 27 பேரும் அடிகாயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 13 பேரும் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியவர்கள் 12 பேரும் மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் 10 பேரும் வீதி விபத்துக்கு காரணமானவர்கள் 05 பேரும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் 23 பேரும் பொது இடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டில் 04 பேரும் கலகம் விளைவித்தவர்கள் 02 பேரும் சூழல் மாசடைதலுக்கு காரணமானவர்கள் 02 பேரும் பாரிய குற்றங்கள் புரிந்தவர்கள் 07 பேரும் திருட்டு மின்சாரத்தில் ஈடுபட்டவர்கள் 04பேரும் ஏனைய குற்றங்களுக்காக 44 பேருமாக மொத்தம் 153பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .