2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கடை உடைத்து ரூ. 47,000 பெறுமதியான பொருட்கள் திருட்டு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 04 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். பருத்தித்துறை வீதி ஆவரங்கால் பகுதியிலுள்ள பலசரக்குக் கடையொன்று நேற்று (03) இரவு உடைக்கப்பட்டு 47 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

மேற்படி கடையின் உரிமையாளர் இன்று காலை திங்கட்கிழமை (04) கடையை திறக்கச்சென்ற போது கடையின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு கடையிலிருந்து 47 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் திருட்டுப் போயுள்ளமை தெரியவந்தது.

இது தொடர்பாக கடை உரிமையாளர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அண்மைக்காலமாக மேற்படி பிரதேசத்திலுள்ள கூட்டுறவுக் கடைகள், வர்த்தக நிலையங்கள், கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .