2025 ஜூன் 21, சனிக்கிழமை

இந்திய வீட்டுத் திட்டத்தில் 500 பேர் தெரிவு: யாழ்.மாவட்ட அரச அதிபர்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                               (த.சுமித்தி)
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் இந்திய வீட்டுத் திட்டத்தில்  500 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் 32,000 குடும்பங்களுக்கு வீட்டுத் தேவை இருக்கின்றது. முதற்கட்டமாக 500 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு சுமார் 550,000ரூபா வழங்கப்படவுள்ளன.

சாவகச்சேரி, தெல்லிப்பளை மற்றும் மருதங்கேணி ஆகிய 3 பிரதேசங்களையும் முதன்மைப்படுத்திய வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் ஆரம்ப நிகழ்வு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி எழுதுமட்டுவான் பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .