2025 ஜூன் 26, வியாழக்கிழமை

முன்கால்கள் வெட்டப்பட்ட 03 பசுக்களுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

முன்கால்கள் வெட்டப்பட்ட 03 பசு மாடுகளை உழவு இயந்திரத்தில்  கொண்டுவந்ததாகக் கூறப்படும் இருவரை யாழ். கேரதீவு, சங்குப்பிட்டி பாலப் பகுதியில்  சனிக்கிழமை (08) இரவு கைதுசெய்ததாக சாவகச்சேரி பொலிஸார்  தெரிவித்தனர்.

இதன்போது உழவு இயந்திரத்துடன் பசுக்களையும்  கன்டர் ரக வாகனமொன்றையும்  மோட்டார் சைக்கிளொன்றையும்; கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

வன்னியிலிருந்து  சாவகச்சேரிக்கு மேற்படி பசுக்களுடன் வந்த உழவு இயந்திரத்திற்கு உதவியாக  கன்டர்; ரக வாகனத்தில் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் ஒருவரும் வந்தனர்.

இந்த நிலையில், வீதிப் போக்குவரத்துக் கடமையிலிருந்த பொலிஸார் உழவு இயந்திரத்தை  இடைமறித்துச்  சோதனையிட்டனர்.  இதன்போது உழவு இயந்திரச் சாரதியும்  கன்டர்; ரக வாகனச் சாரதியும் மோட்டார் சைக்கிளில் வந்தவரும்  தப்பிச்சென்றதாகவும் பொலிஸார் கூறினர்.

இரு சந்தேக நபர்களையும்  சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரவின் வாசஸ்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .