2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்கள் 20 பேருக்கும் தொடர்ந்து விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இந்திய மீனவர்கள் 20 பேரையும் மீண்டும் 14 நாட்களுக்கு  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு இன்று புதன்கிழமை  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  இதன்போது இந்திய மீனவர்கள் 20 பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவின் புதுக்கோட்டை ஜனதாப்பட்டிணம் பகுதியிலிருந்து 5 படகுகளில் வந்து  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேற்படி இந்திய மீனவர்கள் 20 பேரும்; காங்கேசன்துறை கடற்படையினரால் நவம்பர் மாதம் 20ஆம் திகதி இரவு கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேரும்; கடற்படையினரால்  யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .