2025 ஜூன் 28, சனிக்கிழமை

இலங்கை மீனவர்கள் 25 பேர் நாளை விடுதலை

Suganthini Ratnam   / 2014 மார்ச் 20 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்னிலங்கை மீனவர்கள் 25 பேர் அவர்களின் 05 படகுகளுடன் இலங்கைக்கு வெள்ளிக்கிழமை (21) அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இது தொடர்பில் தமிழக நீரியல்வளத்துறை திணைக்களத்திடமிருந்து தங்களுக்கு வியாழக்கிழமை (20) தொலைநகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும்  நீரியல்வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

குறித்த மீனவர்களை அவர்களின் படகுகளுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளதால்,  அவர்களை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு அத்தொலைநகலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும்; அவர் கூறினார். 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .