2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இந்திய மீனவர்கள் 29 பேருக்கும் விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்

யாழ். நெடுந்தீவு தெற்குக் கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார்  உத்தரவிட்டார்.

இந்திய மீனவர்கள் 29 பேரையும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில்  வியாழக்கிழமை (13)  ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்தியாவின்,  புதுக்கோட்டை மாவட்டத்தின் ஜகதாப்பட்டிணப் பகுதியிலிருந்து 07 படகுகளில் வந்த 29 இந்திய மீனவர்களையும்   புதன்கிழமை (12) இரவு காங்கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்து யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறையின் கடற்றொழில் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .