2025 ஜூன் 28, சனிக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு 50000 ரூபா தண்டம்

Kogilavani   / 2014 மார்ச் 31 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்.நாவற்குழி 5 வீட்டுத்திட்டப் பகுதியில் 6180 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவருக்கு 50000 ரூபா தண்டம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் திங்கட்கிழமை (31) உத்தரவிட்டார்.

சாவகச்சேரி மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேற்படி நபரை திங்கட்கிழமை (31) காலை கைதுசெய்து பிற்பகல் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

மேற்குறித்த தண்டப் பணத்தினைச் செலுத்தத் தவறினால் 6 மாதகாலம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என  நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .