2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

யாழில் 03 புதிய வைத்தியசாலைகள் திறப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 16 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


யாழ். மாவட்டத்தின் குரும்பசிட்டி, தெல்லிப்பழை, கொடிகாமம் ஆகிய பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்பட்ட 03 வைத்தியசாலைகளை வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் சனிக்கிழமை (15) திறந்து வைத்தார்.

குரும்பசிட்டியில் ஆங்கில வைத்தியசாலையும்  தெல்லிப்பழை மற்றும் கொடிகாமம் பிரதேசங்களில் கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைகளும்  திறந்துவைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் சி.துரைராசா,  வடமாகாண சுகாதார சுதேச வைத்தியதுறையின் செயலாளர் இ.இரவிந்திரன், வடமாகாண சுதேச வைத்தியத்துறை ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி சி.துரைரட்ணம், வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன், க.சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .