2025 ஜூன் 28, சனிக்கிழமை

சுன்னாகத்தில் 09 சைக்கிள்கள் திருட்டு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 26 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். சுன்னாகம் சந்தைக்கு வருபவர்களின் 09  சைக்கிள்கள் கடந்த வாரம் களவு போயுள்ளதென்று  சைக்கிள்களை பறிகொடுத்தவர்கள்  முறைப்பாடு செய்ததாக சுன்னாகம் பொலிஸார் புதன்கிழமை  (26) தெரிவித்தனர்.

இச்சந்தைப் பகுதியில் பூட்டி வைக்கப்பட்ட சைக்கிள்களே இவ்வாறு களவு போயுள்ளதென்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பொதுமக்கள் தங்களது சைக்கிள்களை உரிய தரிப்பிடங்களில் நிறுத்தாது,  தாங்கள் விரும்பிய இடங்களில் விட்டுச் செல்வதாலேயே இக்களவுகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் கூறினர். 

இந்நிலையில்,  பொதுமக்கள் தங்களது சைக்கிள்களை   உரிய தரிப்பிடத்தில் விட்டு சந்தைக்குச் செல்லுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .