2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 10 இற்கும் மேற்பட்டவர்கள் யாழ். வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 10 இற்கும் மேற்பட்டவர்கள்   யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த வாரங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 08 பேர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை  யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பெண்களும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு பெண்ணும் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பெண்களும்  யாழ். சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு பெண் உட்பட 02  மாணவர்களும் யாழ். போதனா  வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை  அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடுவில், சண்டிலிப்பாய், நல்லூர், யாழ். சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியவற்றில் பெண்களே அதிகமாக டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .