2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழில் ஸ்ரீல.சு.கட்சியின் மாநாடு செப்டெம்பர் 10ஆம் திகதி

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில்,  இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பல்வேறு தரப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர் இராமநாதன் அங்கயனின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்டப் பொறுப்புக்களை தான் பெற்று 2 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் இராமநாதன் அங்கயன் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்தில் சுதந்திரக் கட்சியால் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் இந்த மாநாட்டின்போது தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .