2025 ஜூன் 21, சனிக்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட, குற்றச்செயல்களில் ஈடுபட்ட 140 இற்கும் அதிகமானவர்கள் கைது

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 21 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மற்றும் பிடியாணை  பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் 140 இற்கும் மேற்பட்டவர்கள் கடந்த வாரம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில்  தலைமறைவாகியிருந்த 42 பேரும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 15 பேரும் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 12 பேரும் சட்டவிரோதமாக மிருகங்களை  ஏற்றிச்சென்ற 6 பேரும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 37 பேரும் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 3 பேரும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 14 பேரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .