2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் 15 பேரும் விடுதலை

Kogilavani   / 2013 நவம்பர் 25 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். எழுவைதீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 15 பேரும் சட்டமா அதிபரின் உத்தரவிற்கமைய ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.மகேந்திரராஜாவினால் திங்கட்கிழமை (25) விடுதலை செய்யப்பட்டனர்.

இந்திய புதுக்கோட்டை ஜனதாபட்டிணத்திலிருந்து 4 படகுகளில் வந்த 15 மீனவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் காரைநகர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

மேற்படி மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் தொடர்ந்து மூன்று தடவைகள் விளக்கமறியலில்  வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மேற்படி வழக்கு மீண்டும் திங்கட்கிழமை (25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபரின் உத்தரவிற்கமைய மீனவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி தெரிவித்ததுடன், மீனவர்கள் வந்த 4 படகுகள் தொடர்பான வழக்கினை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

அத்துடன், அத்தினத்தில் மேற்படி 4 படகுகளின் உரிமையாளர்களும் நீதிமன்றத்திற்கு வருகை தரவேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .